கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..

கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..


 


தகவல் சொல்லாமல் சிகிச்சையளிக்க கூடாது சென்னை: கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும், கொரோனா நோய் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவைத்தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவது அறிந்ததே. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், கொரோனோ வைரஸ், தமிழக பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ் அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்க்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தமிழக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசிதழில் கூறப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்கள் மற்றும் லேப்கள் மீது இதன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.


Popular posts
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு
Image
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் காகிதப்பூ போன்றது பி.ஆர்.பாண்டியன் விமர்சனம்
Image
கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள்
Image