சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து உள்ளது.
சென்னை,

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக, வதந்தி பரப்பியவர்கள் என கடந்த 4 நாட்களில் 14 ஆயிரத்து 815 வழக்குகள் பதிவாகி உள்ளன.

 

இந்நிலையில், அவசர பயணம் மேற்கொள்வோருக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணை தமிழக அரசு நேற்று அறிவித்தது.  இதன்படி, 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.  கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

 

திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

 

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து உள்ளது.

Popular posts
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு
Image
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் காகிதப்பூ போன்றது பி.ஆர்.பாண்டியன் விமர்சனம்
Image
கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள்
Image