சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ வேண்டுமென்றால் பான் கார்டு பாஸ்போர்ட் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்-அப்பிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் வங்கியின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கியின் அறிவிப்பைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்காக ஒரே நேரத்தில் வங்கியில் குவிந்தனர்.
மக்களின் எதிர்ப்பால் திணறிய வங்கி நிவாகம் செய்வது அறியாது திகைத்துள்ளது. இதையடுத்து ஏதேனும் ஒருஆவணத்தை சமர்ப்பித்தால் போதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கட்டாயமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வங்கி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.வங்கியின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் தங்களது கணக்குகளை ரத்து செய்வது பணத்தை திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்கள் கணக்கிலிருக்கும் பணத்தைத் திரும்பப் பெற்று வருகின்றனர்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் 2010ல் அது நடைபெற்ற போது எந்தவொரு கடிதமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தேவையற்ற விளம்பரத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உண்டாக்கியுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா செயலை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கண்டிக்கிறேன். மேலும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு தேசிய குடியுரிமை பதிவு தொடர்பான கடிதம் சார்பிக்க தேவையில்லை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.